சிதம்பரம், டிச. 25- விழுப்புரத்தில் இருந்து நாகப் பட்டினம் வரை சிதம்பரம் வழியாக புற வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேளக்குடி, பழைய நல்லூர், அகர நல்லூர், கண்டியா மேடு, வையூர், காட்டுக் கூடலூர், மடத்தான் தோப்பு, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, ஜெயங்கொண்ட பட்டி னம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. சிதம்பரம் அருகே வேளக்குடி- ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மையப் பகுதியில் நுழைவு வழி (சப்வே) அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மனோகரன், பாலமுருகன், மணிவண்ணன், பிரபாகரன், கிரிஜா (சிபிஎம்), மஞ்சு (திமுக), விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் னகலந்து கொண்டனர்.