districts

img

மணிப்பூர் வன்முறை பாஜகவை கண்டித்து புதுவையில் போராட்டம்

புதுச்சேரி, ஜூலை 25-

    மணிப்பூர் கல வரத்திற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஎம், சிபிஐ புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்புணர்வை வேடிக்கை பார்த்த மாநில முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் மூன்று மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் வன்முறையை தடுத்து நிறுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசு கண்டித்தும் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டியும் புதுச்சேரியில் சாரம் ஜீவா சதுக்கம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலத் துணை செயலாளர் சேது செல்வம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். சிபிஎம் மூத்த தலைவர் முருகன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இடதுசாரி கட்சி தலைவர்கள் சுதா சுந்தரராமன், வி.பெருமாள், ராமச்சந்திரன், தினேஷ் பொன்னையா, சுப்பையா, பிரபுராஜ், கொளஞ்சி யப்பன், சத்யா, அந்தோணி உட்பட பலர் உரை யாற்றினர்.