districts

img

ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் மின் மீட்டர்  திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்  

ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் மின் மீட்டர்  திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிதம்பரம் அருகே கீரப்பாளையம் மின்சார அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்  நடைபெற்றது.   ஒன்றிய செயலாளர்  செல்லையா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.