சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சிபிஎம் சார்பில் ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா. வெங்கடேசன், எஸ். கிட்டு, ஆர். திலகா, ஆர். மணிகண்டன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி. சந்திரன், வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு உரையாற்றினர்.