districts

img

கோவை வேளாண் கல்லூரி தேர்வு மதிப்பெண் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

கோவை வேளாண் கல்லூரி தேர்வு மதிப்பெண் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து புதனன்று (டிச.8) சைதாப்பேட்டையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த்குமார் தலைமையில நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் ரா.ஜான்சிராணி, மாவட்டச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் பேசினர். மத்தியசென்னை மாவட்டம் சார்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.விக்னேஷ்வரன் பேசினார்.