திருவள்ளூர், மே 30- திருவள்ளூர் பங்களா மேடு பகுதி இருளர் இன மக்கள் வசிக்கும் தெருக் களுக்கு, சுத்தமான குடிநீர் வந்ததால் உப்பு தண்ணீரி லிருந்து விடுதலை பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்த னர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், செருகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாமேட்டில் இருளர் இனத்தை சேர்ந்த 58 குடும்பங்கள் வசிக்கின் றனர்.கடந்த 10 ஆண்டு களாக உப்பு தண்ணீரை பருகி வந்தனர். இது குறித்து திங்களன்று (மே-29) தீக்கதிரில் செய்தி வெளி யாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர், திருத் தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்களா மேட்டிற்கு விரைந்து ஆழ் துளை கிணற்றிலிருந்து குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கி நல்ல குடிநீர் கிடைக்க வழிசெய்த னர். இந்த சூழலில் பங்களா மேடு தெருவில் உள்ள 6 குழாய்களிலும் திங்களன்று முதல் நல்ல குடிநீர் கிடந்துள்ளதால், பல கி.மீ. தூரம் நடந்து சென்று தலை யில் குடங்களை சுமந்து வரும் பாரத்தை குறைந்த தீக்கதிரின் செய்தி பெரிதும் உதவியதாக பொதுமக்கள் பாராட்டினர்.