districts

சொத்து வரி மறுசீரமைப்போம்: துணைமேயர்

சென்னை, ஏப். 9 - மாநகராட்சி நிதி நிலை  அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக ஆலந்தூர் மண்டலக் குழுத் தலைவர் சந்திரன், ஆலந்தூர் நகராட்சியாக இருந்த போதே சொத்து வரி உயர்த்தப் பட்டது. மாநகராட்சியுடன் இணைந்த பிறகு மீண்டும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரியின் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, வரியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த துணை  மேயர் மகேஷ்குமார், “வரி உயர்வை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக முதலமைச்சரிடம் மாநகராட்சி ஆணையர் பேசி யுள்ளார். சொத்துவரி மறுசீர மைப்பு செய்யப்படும் என்றார்.

ரேணுகா (சிபிஐ)
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணுகாவை, பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு  இடையூறு செய்தனர். இதனை யும் மீறி பேசிய அவர், நிதிநிலை அறிக்கையில் கடன் எவ்வளவு உள்ளது என்ற விவரம் இல்லை. நிதி நெருங்கடியை சமாளிக்க மக்கள் மீது அதிக வரி விதிப்பது சரியல்ல. சொத்து வரி உயர்வில் உள்ளாட்சி மன்றங்களுக்கு மாற்றாக மாநில அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. இது  உள்ளாட்சி மன்றங்களின் அதி காரத்தை மீறும் செயல்” என்றார். இதற்கு பதிலளித்த துணை மேயர், “அடுத்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என்றார்.