சென்னை, ஏப். 12- சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் கருத்துக் களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநக ராட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், உயர்த்தப்பட்ட சொத்து வரி மடங்குடன் தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படை தெரு கட்ட ணத்துடன் பெருக்கி நடப்பு நிதியாண்டின் முதல் அரை யாண்டு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்படும். மேலும் தற்போது தங்கும் விடுதிகள், திருமண மண்ட பங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அவை வசூலிக்கும் நாள் வாடகை அடிப்படையிலும், திரையரங்குகளுக்கு அவை வசூலிக்கும் இருக்கை கட்டணம் அடிப்படையிலும் சிறப்பு வகை கட்டணம் என குறிப்பிடப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறைகளால் நிர்வாக சிக்கல்கள், தேவை யற்ற வழக்குகள் தொடரப் படுவதால் இவ்வகை கட்டிடங்களுக்கு குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு விதிக்கபடுவதைப்போல் சொத்துவரி விதிக்கப்படும். இவர்கள் 2021-2022 சொத்து வரி பழைய முறை யில் செலுத்தப்பட வேண்டும். அனைத்து நிலுவை வரி யினை செலுத்திய பிறகு புதிய அடிப்படை தெரு கட்ட ணத்தில் புதிய கணக்கீட்டு முறையில் 2022-23ஆம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் எழுத்து மூலமாக மாநக ராட்சி ஆணையருக்கு தெரி விக்க வேண்டும். பொது மக்கள் ஆன்லைன் வழியாக வும், நேரடியாகவும் கருத்துக் களை தெரிவிக்கலாம். அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சொத்து வரி உயர்வு குறித்த ஆட்சே பனை கடிதங்களை ஆணை யருக்கு முகவரியிட்டு கொடுக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.