districts

img

நுண்நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுத்திடுக! வருவாய்த்துறை அதிகாரியிடம் மாதர் சங்கம் மனு

சென்னை, ஜூன் 14 - நுண்நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை முறையாக விசாரித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யறுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் பெண் களுக்கு கடன் வழங்குகின்றன.

கடன் வழங்கி விட்டு, வரையறை இன்றி அதிக வட்டி வசூ லிப்பது, கூடுதல் தவணைகளை செலுத்த நிர்பந்திப்பது என அராஜகம் புரிகின்றன. இந்நிறுவனங்களில் முகவர்கள், பெண்களை சாலையில் நின்று அவ தூறாக பேசுவது போன்ற உளவியல் தாக்கு தல்களை தொடுக்கின்றனர். நுண்நிதி நிறு வனங்களின் அராஜகத்தால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு உறுப்பினருக்கு 15க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கின் றன.

கடனை திருப்பி செலுத்த மீண்டும் கடன் வழங்குவது என்று பெண்களை மிகப்பெரிய கடன் வலையில் சிக்க வைக்கின்றனர்.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அதிகளவு வட்டி நிர்ணயிப்பதால் பெண்களால் வங்கி கடன்களை பெற முடிவதில்லை.

இதனால் கந்து வட்டியை நோக்கி பெண்கள் செல்லும் நிலை உருவாகிறது. இந்த நிலையில், சென்னை மாவட்ட வரு வாய்த்துறை அதிகாரி அனுசியாவிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்கள் எஸ்.சரவண செல்வி, ம.சித்ர கலா (தென்சென்னை), பாக்கியலட்சுமி, தேவி (வடசென்னை), ஆ.சாந்தி, நாகராணி, குப்பு (  மத்திய சென்னை) ஆகியோர் மனு அளித்தனர்.

அதில், நுண்நிதி நிறுவனங்களின் மோசடி, அடாவடித்தனத்தை தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இத்தயை நிறுவனங்களை முறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கென தனி உதவி எண்ணை  அறிவிக்க வேண்டும். பெண்களுக்கு கடனு தவி வழங்க தனி வங்கிகளை ஏற்படுத்த வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளனர்.