சென்னை, பிப்.3- புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட் டத்தை மாற்றுவதற்காக ‘அன்மாஸ்க் கேன்சர்’ (புற்றுநோய் பற்றிய சரியான தக வல்களை வழங்குதல்) திட்டம் சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இந்த மருத்துவ மனையின் மார்பு, தலை, கழுத்து பிரிவு இயக்குநர் சப்னா நாங்கியா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளும், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகவும், சமூ கத்துக்குள் புற்றுநோயாளிகள் மீது புரிதலை வளர்ப்பதற்காகவும், புற்றுநோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தங்களது வாழ்க்கை முறை, குடும்பத்தின் ஆதரவு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், புற்று நோயில் இருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிராக பாகுபாடு, உதா சீனம், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை நீக்கி, மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான நலத்தில் கவனம் செலுத்த, இத்திட்டம் பெரிதும் உதவும். இதற்காக,https://www.apollohospitals.com/cancer-treatment-centres/unmask-cancer/ என்ற இணைய தளத்தில் புற்றுநோய் குறித்த விழிப்பு ணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது. சமூகத்திற்குள் சமத்துவம் மற்றும் புரிந்துணர்வு கலாச்சாரத்தை உரு வாக்குவதே இந்த பரப்புரைத் திட்டத்தின் நோக்கம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.