முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ‘அன்பிலதனை அறம்’ அனைத்திந்திய கலைப் பயணம் புதுச்சேரிக்கு வருகை தந்தது. வில்லியனூர் தென்கோபுர வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுதா சுந்தரராமன் வாழ்த்திப் பேசினார்.