நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி திருவண்ணாமலையில் சமூக கொடுமை எதிர்ப்பு முற்போக்கு கூட்டமைப்பு சார்பில் அண்ணா சாலையில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி என்.ஏ.கிச்சா தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம் .சிவக்குமார், சிபிஐ, விசிக, திக, பிஎஸ்பி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, நண்பர்கள் சங்கம், அம்பேத்கர் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.