சென்னை,ஜூலை 14-
செயற்கை நுண்ணறி வில் திறன் மிகு பொறி யாளர்களை உருவாக்க எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனமும் ஜப்பான் நாட்டின் காக்னவி மனித வள நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
உலகளவில் 9 லட்சம் பட்டதாரிகள்,15 லட்சம் பொறியாளர்கள் தேவை உள்ளதால் செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்களை உரு வாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்ஆர்எம் குளோபல் கன்சலேட்டிங் நிறுவனத்தின் தலை வரும் எஸ்ஆர்எம் அறி வியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனத்தின் இணை வேந்தருமான டாக்டர் பா.சத்தியநாராயணன் காக்னவி இந்தியா நிறு வனம் மேலாண்மை இயக்கு னர் மிட்சுட்டாக செகி னோ ஆகியோர் கையொப்ப மிட்டு ஒப்பந்தத்தை பரி மாறிக்கொண்டனர்.
காக்னவி நிறுவனம் உலக அளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரு வதில் பாலமாக இயங்கி வரு கிறது. தொழில் நிறுவனங்க ளுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திறன் மிகு பொறியாளர்கள் மற்றும் அதற்கான சாதனங்களை உருவாக்கும் அமைப்பாகும். இதன் அடிப்படையில் இந்திய மாணவர்களை அதற்கு தயார்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளன. இதனை அந்த நிறுவனத்தின் நிதி உதவியுடன் இயங்கும் போரம் இன்ஜினியரிங் நிறு வனம் மற்றும் கிராஸ்க்கோ லிமிடெட் நிறுவனங்கள் மூலமாக இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாண வர்களை உருவாக்க பணியை மேற்கொண்டுள் ளன.அதன்படி எஸ்ஆர்எம் குழும கல்வி நிறுவனம் அதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். தனது மாண வர்களை திறன்மிகு நிபுணர்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளளது.