districts

img

சென்னையின் 3வது பெண் மேயராகிறார் ஆர்.பிரியா

சென்னை,மார்ச் 3- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரு வாரியாக வெற்றி பெற்றதை யடுத்து சென்னை உள்பட 20 மாநகராட்சியில் மேயர் பதவிக்கு தி.மு.க. போட்டி யிடுகிறது. இந்த பதவிகளுக்கு வேட் பாளர்களையும் திமுக தலைமை வியாழனன்று அறிவித்துள்ளது. தமிழ கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட் சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவி களுக்கு தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. தலைமை யிலான கூட்டணி அதிக வார்டு களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 21 மாநக ராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் புதனன்று பதவி ஏற்றனர்.

இன்று மறைமுக தேர்தல்
இதையடுத்து மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வெள்ளியன்று (மார்ச் 4) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டி யிடும் மேயர் மற்றும் துணை மேயருக்கான வேட்பா ளர்கள், நகராட்சித்தலைவர் கள் துணைத்தலைவர்கள் , பேரூராட்சித்தலைவர்கள் துணைத்தலைவர்கள் தேர்த லில் போட்டியிடும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. மேயர்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர்.பிரியா போட்டியிடுகிறார்.,துணை மேயர் பதவிக்கு மு.மகேஷ் குமார் போட்டியிடுகிறார். வடசென்னை திருவிக நகர் தொகுதிக்குள் அடங்கிய 74வது வார்டில் இருந்து ப்ரியா கவுன்சிலராக தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளார். சென்னையில் 3வது முறையாக பெண் ஒருவர் மேயர் பதவியை அலங்க ரிக்க உள்ளார்.இதற்கு முன் 1950 தாராெசரியன், 1971-72ல் திமுக சார்பில் காமாட்சி ெஜயராமன்   ஆகியோர் பெண் மேயராக இருந்துள்ளனர். தற்போது முதன் முறையாக, வடசென்னை யை சேர்ந்த ஒருவர் மேயர் ஆகின்றார் என்பதும் கூடுதல் சிறப்பு. முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் மகள் தான் இந்த ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா ராஜன் சென்னையின் மேயர் ஆகும் பட்சத்தில் சென்னையின் இளம் வயது மேயர் என்ற சிறப்பையும்பெற உள்ளார்.

ஆவடி மேயர்
 ஆவடி மேயராக ஜி.உதயகுமார், துணை மேயராக ம.தி.மு.க. கட்சியை சேர்ந்த சூர்யகுமார், தாம்பரம் மேயராக வசந்த குமாரி கமலகண்ணன், துணை மேயராக ஜி.காமராஜ் காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.காஞ்சி புரத்தில் துணை மேயர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.