districts

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சென்னை மண்டலம் சார்பில் வருகை தந்த பிரச்சார குழுவிற்கு கொளத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்டுமானம், அமைப்புசாரா, தையல் ஆட்டோ உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் ஆட்டோ சங்க பகுதி தலைவர் பூபதி, கட்டுமான சங்க பகுதி செயலாளர் மூர்த்தி, அமைப்புசாரா பகுதித் தலைவர் தமிழ்மணி, சிபிஎம் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.