காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம், பிப்.14 - படித்துவேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (பிப்.16) வெள்ளியன்று காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முகதேர்வினை நடத்த உள்ளனர். அதே சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம்வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந் தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத் துடன் வெள்ளிக்கிழமை (பிப். 16) காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் திருமலை பாலி டெக்னிக் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் மர்மச் சாவு சென்னை, பிப். 14- ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் மர்மமாக இறந்தார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் பால் (25). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் புதன் கிழமை காலை ஏழு கிணற்றில் உள்ள ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி விடுதி யில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழுகிணறு காவல் துறையினர் ரஞ்சித் பால் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ரஞ்சித் பால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல் நலம் பாதிக் கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம் நிறைவு
திருவள்ளூர், பிப் 14- சிஐடியு தொழிற்சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், 13 நாட்களுக்கு பிறகு வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் கள் அனைவரும் புதன்கிழமை (பிப்.14) பணிக்கு திரும்பினர். 10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழி லாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிப் 2 முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி கேட் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதனன்று. (பிப் 13) சென்னையில் துணை ஆணையாளர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வாக மாதம் ஒன்றுக்கு ரூ.1400 கூடுதலாக வழங்குவது, இ எஸ் ஐ சலுகை இல்லாதவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைப்பது, நிலுவைத் தொகை வழங்குவது போன்றவற்றை ஒப்புக் கொண்டது. சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பொறுப்புக்கள் சம்பந்தமாகவும் ஒவ்வொரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஆகியவற்றை பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் காணுவது என வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகத்தால் ஒப்புக் கொள்ளபட்டது. பணிநிரந்தரம் குறித்து நீதிமன்ற நடவடிக்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நிர்வாகம் சங்கத்துடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 ஒப்பந்த தொழிலாளர்களும் பயனடை வார்கள் என தலைவர்கள் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், கிளை நிர்வாகிகள் சதிஷ், பிரபாகரன், சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
சென்னை பல்கலை. வங்கி கணக்கு முடக்கம் அரசு தலையிட மாணவர் சங்கம் கோரிக்கை
சென்னை, பிப். 14 – சென்னை பல்கலைக் கழக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள விவ காரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத் தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செய லாளர் சி.மிருதுளா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அரசு கல்வி நிலையங் களுக்கு 50 விழுக்காட்டிற்கு மேல் அரசு நிதி ஒதுக்கி னால் வரி விலக்கு அளிக்கப் ப்படும். சென்னை பல்கலைக் கழகமும் 50 விழுக்காட்டிற்கு மேல் அரசிடமிருந்து நிதி பெற்று வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அரசின் தணிக்கை துறையின் ஆட்சேபனை களை காரணம் காட்டி மாநில அரசு குறைந்த அளவு நிதி ஒதுக்கியுள்ளது. இதனால் 2017 - 2021 வரை காலகட்டத்திற்கு 424 கோடி வரி செலுத்த வரு மான வரித்துறை நோட்டீஸ் விடுத்திருந்தது. அதனை பல்கலைக்கழக நிர்வாகம் மெத்தனமாக கையாண்ட தால், 37 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது. 80 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக் கப்படும் என்று தகவல்கள் வருகிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை வரு மான வரித்துறை விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்தை பாதுகாக்க துரித நட வடிக்கை எடுக்க வேண்டும். வங்கி கணக்கு முடக்கத் திற்கு காரணமான நிர்வாகத் தின் துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்கள் சங்க கிளை அமைப்பு
கிருஷ்ணகிரி,பிப்.14- சோக்காடி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. சோக்காடி கிராமத்தில் 16 மலைவாழ் பழங்குடி மக்கள் குடும்பத்தினர் நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர். இவர்க ளின் அடிப்படை பிரச்சனை களுக்கு தீர்வு காண இங்கு மலைவாழ் மக்கள் சங்க கிளை அமைக்கப்பட்டது.கிளைத் தலைவராக மாரி, செயலாளராக துரை, பொருளாளராக பூங்கொடி, துணைத் தலை வராக அஜித்,துணை செய லாளராக முருகேஷ் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்ட செய லாளர் குமார வடிவேல், மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செய லாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லஞ்சம் வாங்கிய ஆர்டிஓக்கு 2 ஆண்டுகள் சிறை
கடலூர்,பிப்.14- கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியராக 2008 ஆம் ஆண்டு பணிபுரிந்தவர் குழந்தைவேல். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த சிராஜுதின் என்ற லாரி உரிமையாளரின் டிப்பர் லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததாக பிடிக்கப்பட்டது. இந்த லாரியை விடுவிக்க வருவாய் கோட்டாட்சியரை சிராஜுதீன் அணுகியபோது அவர் ரூ50ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து சிராஜுதீன் கடலூர் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதனை அடுத்து ரசாயனம் தடவிய 5000 ரூபாயை சிராஜுதீன் கொடுக்கும்போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 22.01.2008 அன்று கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலுவை கைது செய்தனர். இந்த வழக்கானது கடலூர் நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை நீதிபதி பிரபாகரன் தீர்ப்பு வழங்கினார். லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தும் அவருக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988 கீழ் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் ஐந்து மாத காலம் கூடுதல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.