districts

img

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்: பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார்

காஞ்சிபுரம், ஜூன்.2 - தமிழ்நாடு பாலர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் மூன்றாம் ஆண்டாக 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி  (ஜூன்.2) ஞாயிறன்று காஞ்சிபுரம், ஓரிக்கையில் நடைபெற்றது.   காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வி.சிவப்பிரகாசம் தலைமை யில் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்களை வழங்கி பேசினார். சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் சி.சங்கர், கே.சங்கர், இ.சம்பத், இ.சங்கர்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் லெனின், சமூக செயற்பாட்டாளர் சாரதா,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், தமுஎகச மாவட்டச் செயலாளர் கு.ஆறுமுகம், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.முருகேசன், ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் கல்வி உபகரணங்களையும் வழங்கினார். காஞ்சி வட்ட பொறுப்பாளர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், சி.மகேந்திரன், கே.செல்வம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.