districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் பரவும் கண் அழற்சி பாதிப்பு

சென்னை,ஏப்.25-  கோடை வெயிலால் கண் அழற்சி  நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள்   தெரிவித்துவருகின்றனர்.  கோடை காலத்தில், உலர்ந்த கண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் என அதிகளவில் ஏற்படுகின்றன. அதன்படி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஒவ்வாமைகள் மற்றும் காயங்களில் இருந்து, கண்களை பாதுகாப்பது அவசியம். கண்களில் கண்ணீர் சுரக்காதபோது, உலர்ந்த கண்கள்  பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, கண்களை  ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தண்ணீர்  அல்லது சொட்டு மருந்தை பயன்படுத்த லாம். கடந்த இரண்டு வாரங்களாக, இளம் சிவப்பு கண் நோய் என்ற கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கண் தொற்றுகள் வராமல் தடுக்க  கைகளை  அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  கண்களை கைகளால் தொடு வதை தவிர்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக  இருப்பின்,  லென்ஸ்களை கண்ணில் பொருத்து வதற்கும் அல்லது அகற்றுவதற்கும் முன்னதாக  கைகளை கழுவுவது உள்பட முறையான தூய்மை நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.  கண்களை ஈரபதத்து டன் வைத்திருப்பதுடன், சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதா  கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ள   கண்பாதுகாப்பு கண்ணாடி அணிந்து வெளியே செல்வது நல்லது. அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது என மருத்து வர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

தங்க செயினை  போலீசில் ஒப்படைத்த துப்புரவு ஊழியர்

சென்னை,ஏப்.25- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 8 மற்றும் 9-ல்  வ.உ.சி.நகரை சேர்ந்த துப்புரவு பெண் ஊழியர் செந்தாமரை தூய்மை பணி யில் ஈடுபட்டு கொண்டி ருந்தார். அப்போது பிளாட் பாரத்தில் ஒரு செயின் கிடந்ததை கண்டு எடுத்தார். அது தங்க செயின் என தெரிய வந்தது. அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ரூ 2 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் சங்கிலியை நேர்மையாக எடுத்துக்கொடுத்த தூய்மை பணியாளர் செந்தா மரையை ரயில்வே காவல் துறை உயர்அதிகாரிகள் நேரில் அழைத்து வழங்கி பாராட்டினர்.

5 டன் ரசாயன மாம்பழம் பறிமுதல்

சென்னை,ஏப்.25-  மாம்பழம் சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில்  கோயம்பேடு சந்தைக்கு  மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழ கடைகளில் ரசாயனம் மூலம் வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து  வருவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தொடர்ந்து  புகார்கள் வந்தது. இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் செவ்வாயன்று கோயம்பேடு பழ மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.   சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளில் ரசாயனம் மூலம் மாம்பழங்கள், வாழைப்பழங்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 5 டன் மாம்பழங்கள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாஞ்சா நூல் அறுத்து  இருவர் படுகாயம்

 சென்னை,ஏப்.25-  சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (வயது33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி  கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். திங்களன்று  இரவு இருவரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது பட்டம் பறக்க பயன்படுத்தக்கூடிய மாஞ்சா நூல்  நிக்கி சரண் கழுத்தில் திடீரென மாட்டியது. இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் கழுத்து அறுந்த நிலையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இருவருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டு வீதியில் நின்ற நிலையில் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். கழுத்து பகுதி பலமாக வெட்டப்பட்ட நிலை யில் இருந்த நிக்கி சரண் மற்றும் வந்தனா இருவரும் அங்கிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா தடவி பறக்கவிட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி ஏரியை  சீரமைக்க திட்டம்

வண்டலூர்,ஏப்.25-  கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணிக்காக ஏரியில் உள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பாக கருத்து கேட்பு  கூட்டம் நடைபெற்றது. ஏரி நீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரியின் கொள்ளளவையும் கரையை உயர்த்தியும் ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்றியும் ஏரியின் கரை மீது நடை பாதைகள் அமைத்து அதில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பணிகளை மேற்கொள்ள நபார்டு வங்கி ரூ.6 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த ஏரியின் பாசனப்பகுதியில் அறுவடை நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கு தண்ணீர் தேவைப்படாது என்பதாலும் சீரமைப்பு பணியை தொடர விவசாயிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

மகளிர் குழு கடன் தள்ளுபடியில் குழப்பம்: கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, ஏப். 25- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரிய கோளாப்பாடி கூட்டுறவு கடன் சங்கத்தில், சின்ன கோளா பாடியைச் சேர்ந்த சோலையம்மாள் நகர் மகளிர் குழு கடன் பெற்றுள்ளனர். அந்த மகளிர் குழு கடனை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அந்த மகளிர் குழுவில் உள்ள 15 உறுப்பினர்களில் முனியம்மாள் என்பவருக்கு மட்டும் கடன் தள்ளுபடி இல்லை என கூட்டுறவு சங்கத்தில் கூறுவதுடன், அந்த முனியம்மாள் பெயரில் உள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டும் என சங்க செயலாளர் கூறுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் மகளிர் குழு பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் கார்த்திகேயன் எம்எல்ஏ  கோரிக்கை மனு

கள்ளக்குறிச்சி,ஏப்.25- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமாரை சந்தித்து  சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-  கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அனைத்து ஊராட்சி களுக்கும் தேவையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும், ஊராட்சிகளின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக வங்கி இருப்பு உள்ள ஊராட்சிகளின் மின் கட்டணத்தை வங்கி கணக்கிலிருந்து ஊராட்சி பொது நிதிக்கு மாற்றி தர நட வடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிய குப்பை சேகரிக்கும் வண்டி மற்றும் டிராக்டர்கள் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணி களுக்கான பொருள் கூறு தொகை யினை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தி ருந்தார்.  மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

ஓசூர் நூலகத்தில் புத்தக தின விழா

ஓசூர், ஏப்.25- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில், உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. தனி யார் அறக்கட்டளை மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட பொருளாளர் ஜெகந்நாதன் தலைமை தாங்கினார். ஓசூர் அரசு கல்லூரி பேராசிரியர் பொன்ஜெயந்தி மற்றும் அந்திவாடி அரசு உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் ராணி ஆகி யோர் கலந்து கொண்டு விழாவில் பேசினர். விழாவின்போது, நூலக புரவலர்களுக்கு, புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது.