சென்னை,பிப்.17- உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ‘தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்’ அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய் துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணியாற்றிய போது தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னை யைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை யின்போது சேகர்ராம் போலி பத்திரிகையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண் டும் என்று தமிழக அரசுக்கு உத்தர விட்டனர். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதன்படி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய் யப்பட்டது. அதில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உரு வாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.