districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் புகழஞ்சலி கூட்டம்

சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 78வது நினைவு தினமான ஞாயிறன்று (பிப்.11) நொச்சிகுப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஜெ.அன்புரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி, பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், நொச்சிக்குப்பம் கிளைச் செயலாளர் ஆர்.விநாயகம், கே.ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் பேசினர்.