சென்னை,பிப்.4- நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இறுதிப் போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளை யாடிய பிரக்ஞானந்தா டை பிரேக்கிற்கு பிறகு வெற்றி பெற்றார். தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக் ஞானந்தா கடைசியில் விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் அவர் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா செவ்வாயன்று (பிப்.4) சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து செய்தியளர் களுக்கு பேட்டி அளித்த பிரக்ஞா னந்தா கூறியதாவது, இந்த போட்டிக்காக சிறந்த முறை யில் பயிற்சி பெற்றேன். இந்த வெற்றி யானது, எனக்கு மிகவும் முக்கியமா னது. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது . போட்டியின் போது முடி வெடுக்க குறைவான நேரமே இருந்தது. இந்தாண்டு தொடக்கத்திலேயே எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என தெரிவித்தார் . இந்த நிலையில், பிரக்ஞானந்தா இன்று காலையில் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அப்போது, உற்சாக வரவேற்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, `` டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் மாஸ்டர் போட்டி, 85 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் மதிப்புமிக்க போட்டி. இதில், நிறைய முன்னாள் உலக செஸ் சாம்பியன்களெல்லாம் விளையாடியிருக்கிறார்கள். அத்தகைய போட்டியில் வென்றது பெருமையாக இருக்கிறது. 2024-ம் ஆண்டின் பிற்பாதியில் நான் சரியாக விளையாடவில்லை. இப்போது, 2025-ல் முதல் தொடரிலேயே வெற்றி பெற்றிருப்பது சந்தோஷமாக இருக்கி றது. பதற்றம் நிறைந்த இறுதி சுற்று இந்தத் தொடருக்காக நானும், எனது பயிற்சியாளரும் நிறைய பயிற்சி எடுத்திருந்தோம். இந்தத் தொடர் உத்வேகமாக இருந்தது. இறுதிச் சுற்று ரொம்ப பதட்டமாக இருந்தது. இரண்டு பேருமே வலுவான போட்டியாளர் களுடன் விளையாடினோம். ஆரம்பத்தி லேயே சிரமத்தில் மாட்டிக்கொண் டோம். பிறகு, டை-பிரேக்கரில் வென்றது சந்தோஷம். இறுதியில் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு தமிழ்நாட்டு வீரர்களிடம்தான் வந்தது. எப்படியிருந்தாலும் இந்த சாம்பியன் பட்டம் நம்ம ஊருக்குதான் வந்திருக்கும்.” என்று கூறினார்.