ராணிப்பேட்டை, ஆக.17-
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொண்ட பாளை யத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்ற னர்.
மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு 1,305 படிகளை கடக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் பாதிப்பு உள்ளவர்கள் படிக்கட்டு வழியாக செல்வது கடின மானது. அவர்கள் டோலி தொழிலாளர்கள் கட்டணம் பெற்று சுமந்து செல்கின்றன.
இதுபோன்ற வயதானவர்கள் உட்பட படிக்கட்டுகளில் ஏற முடியாத பக்தர்களுக்கு என கம்பிவட ஊர்தி (ரோப் கார்) வசதி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு கட்ட சோதனை களுக்கு பிறகு ‘ரோப் கார்’ அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து, சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலை கோவிலில் ரோப் காரில் பய ணிக்கும் போது ஏற்படும் அவசரகால விபத்துக்களை எதிர்கொள்ளும் பொருட்டு, மீட்பு ஒத்திகை பணி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நடை பெற்றது. ரோப் கார் விபத்தில் சிக்கினால் எப்படி மீட்பது என செய்து காட்டினார்.
இந்நிகழ்வில் சோளிங்கர் தீயணைப்பு துறையினர், சோளிங்கர் வட்டாட்சியர், சோளிங்கர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் கலந்து கொண்டனர்.