districts

img

ஓய்வூதியர்களின் கலங்கரை விளக்கமாக மின்வாரிய ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு - எஸ்.எஸ்.சுப்பிரமணியன்,

1990 களில் நவீன தாராளமயக் கொள்கை  அமலாக்கம் என்ற பெயரில் உழைப்பாளி மக்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்ப்பட்டன.  அதை எதிர்த்து எழுந்த  வீறு கொண்ட  எழுந்த போராட்டங்களுக்கு தலைமையேற்று தமிழக மின் வாரியத்தில் களமாடிய மத்திய அமைப்பின் தலை வர்களும் ஊழியர்களும் ஓய்வு பெற்ற பின்னர், அவர்களின் உரிமைக்காக ஓங்கி   குரல் கொடுக்க ஒரு அமைப்பு தேவை என்ற  முறையில் 1997 ல் தமிழ் நாடு ஓய்வு  பெற்றோர் நல அமைப்பை உருவாக்கப் பட்டது.  இது 1998 ல் பதிவு செய்து மின் வாரிய ஓய்வு பெற்றோர் உரிமை காக்கும்  கேடயமாக செயல்பட்டு வருகின்றது. நல அமைப்பு துவங்கிய அதே ஆண்டு   5 ஆவது ஊதிய குழுவின் அடிப்படை யில் 40 விழுக்காடு ஊதிய உயர்வு மின் வாரிய ஊழியர்களுக்கு அளித்ததை, மின் வாரிய ஓய்வூதியர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அரசு  ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட என்னென்ன சலுகை அளிக்கப்படுகின்றதோ அவை அனைத்தும் மின் வாரிய ஒய்வூதியர்களுக்கும் அளிக்கப் படும் என, ஒப்பந்த சரத்தில் சேர்க்க களமாடிய  அமைப்பு தமிழ் நாடு மின்வாரிய  ஓய்வு பெற்றோர் நல அமைப்பாகும். அந்த சரத்துதான், மின் வாரிய ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தடுத்து நிறுத்த முடியாத அரணாக உள்ளது.

2000 ஆம் ஆண்டு வாக்கில் ஓன்றியத்தை ஆண்ட  அரசு,  நவீன தாராளமய கொள்கை அமுலாக்கலின் உச்சகட்டமாக ஓய்வூதியர்கள் போராடி பெற்ற உரிமை களுக்கு உலை வைக்கும் விதமாக செயல்பட்டது.   முழு ஓய்வூதியம் கணக்கிட 30 ஆண்டு என்றிருந்தை,  33 ஆண்டுகளாகவும், கம்யூடேஷன் 40 விழுக்காடு என்றிருந்தை  33.33 விழுக்காடாகவும் ஓய்வு பெறும் போது  அவர்கள் சேமித்த ஈட்டிய விடுப்பில் 6 மாத காலத்தை ஒப்புவித்து பணமாக  பெறுதல் போன்ற சலுகைகளை ரத்து செய்து,  பல லட்சம் ரூபாய் இழப்பை உருவாக்கும்  உத்தரவை பிறப்பித்து ஒன்றிய, மாநில அரசு ஊழியர்க ளுக்கு அமலாக்கம் செய்தது. தமிழக மின்வாரிய ஊழி யர்களுக்கும் பிறப்பித்த அந்த  அமலாக்க உத்தரவை கிழித்தெறிய உச்சநீதிமன்றம் வரை சென்ற அமைப்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பாகும். அரசு அலுவலகங்களில் தினக் கூலி தொழிலாளியாக பணியாற்றி நிரந்தரம் பெற்று பணி ஓய்வு பெறும் போது  அவர்கள் தினக் கூலி தொழிலாளியாக பணியாற்றிய பணிக்காலத்தில் 50 சதவீத காலத்தை கணக்கில் கொண்டு  ஓய்வூதியம் வழங்க அரசு ஆணை பிறப்பித்ததை,  மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று  கோரிக்கையை முன் வைத்து அரசு மற்றும் வாரியத்தோடு  பேசி மின் வாரியத்தில் அமல்படுத்த செய்த அமைப்பு ஓய்வு பெற்றோர்  அமைப்பாகும். ஒரு காலகட்டத்திற்கு பின்னர் தமிழக மின்சார வாரியத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதை ஓப்பந்த  தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிக்கு அமர்த்தி தொடர்ச்சியாக பணி  செய்ய வைப்பது என்ற நிலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணி செய்த  காலத்தையும்  பணிக் காலமாக கணக் கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்   வைத்து பேச்சு வார்த்தை நடத்திய தோடு,  நீதி மன்றமும் சென்று ஒரு சாதகமான தீர்ப்பினையும் பெற்றது நமது ஓய்வு பெற்றோர் அமைப்பு.

சிக்கன சீரமைப்பு, நிதியில்லை என்ற காரணம் காட்டி அகவிலைப்படி வழங்க காலதாமதம் செய்தது, அகவிலைப்படி வழங்காதது போன்ற காலங்களில்  போராட்டம், மறியல் நடத்தி அகவிலைப்படியை பெற்றுத் தந்த அமைப்பு நமது ஓய்வு பெற்றோர்  அமைப்பு. மின் வாரியத்தின் சுயேச்சையான செயல்பாட்டை முடக்கி, மின் வாரிய ஊழியர்கள் அரசு ஊழியர்கள் அல்லர். அவர்கள் கம்பெனி ஊழியர்கள். அதனால் அரசு  ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகளை  மின்சார கம்பெனி ஊழியர்கள் கேட்க கூடாது.  கேட்டாலும் பரிசீலிக்க முடியாது என்று பிறப்பிக்கப்பட்ட உத்தர வினை எதிர்த்து நீதி மன்றம் சென்று நமக்கு சாதகமான  உத்தரவை பெற்ற அமைப்பு நமது ஒய்வு பெற்றோர் அமைப்பு. மின் ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் இறக்க  நேரிட்டால் அவர்களது வாரிசாக உள்ள, விதவை, விவாகரத்தான மகளுக்கு வழங்கி வந்த குடும்ப ஓய்வூதியத்தை தொடர்ந்து அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  போராடும் அமைப்பு நமது ஓய்வுபெற்றோர் அமைப்பு.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்உற்பத்தி, மின்சாரத்தை எடுத்துச்செல்லுதல், மின் பகிர்மானம் ஆகிய  மூன்றும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் உற்பத்தி, விநியோகம், தெர்மல் உற்பத்தி, பசுமை மின் கழகம் TNEB LIMITED என ஜந்தாக பிரித்து மக்கள் சேவைக்கு வேட்டு வைத்துள்ளதோடு, மின்  வாரிய ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் உட்பட அனைத்தும்  கேள்விக் குறியாகியுள்ளதை,   கடந்த 14 ஆண்டுகளாக  தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், மின் வாரிய பிரிப்பை அமலாக்க தன்னிச்சையாக செய்து கொண்ட  ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்தி, அனைத்து  அமைப்பு களோடு பேச்சு வார்த்தை நடத்தி, ஒப்பந்தம் காண வேண்டும் என ஓய்வூதியர் அமைப்பு போராடி வருகிறது.   இம்மாநாட்டுக்கு பின்னர் வலுவான ஒற்றுமையை உருவாக்கி வலிமையான போராட்டங்களை நடத்த வேண்டும் என்ற திட்டமிடலோடு, மின் நுகர்வோர்,மின் வாரிய ஊழியர்கள், ஓய்வூதியர்,குடும்ப ஓய்வூதியர் நலன்களை பாதுகாக்க போராட்ட வியூகம் அமைக்கும் மாநாடாக  அமையட்டும் திருவண்ணாமலையில் நடை பெறும் ஓய்வூதியர் அமைப்பின் 9 ஆவது  மாநாடு !!