சென்னை, மார்ச் 12- சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 14) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம், சிட்லபாக்கம் பகுதிக்குட்பட்ட மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் 3ஆவது தெரு, நேரு தெரு, ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி நகர் கடப்பேரி லட்சுமிபுரம், ஓடப்பாளையம், பாரதிதாசன் தெரு, சாமுண்டீஸ்வரி நகர், ஸ்ரீபுரம், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆவடி பகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகர் அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் , எழில் நகர், கணேஷ் நகர், கோனாம்பேடு, ஒம்சக்தி கனபஸ், தனக்கில்லா கேம்ப் ரோடு, புழல் வள்ளுவர் நகர், வேலம்மாள் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், கே.கே நகர் பகுதிக்குட்பட்ட கே.கே நகர் மேற்கு, தெற்கு பிரிவு, அசோக்நகர் கிழக்கு பிரிவு, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், வில்லிவாக்கம் பகுதிக்குட்பட்ட திருவட்டீஸ்வரர் தெரு, ராஜீ தெரு, சபாபதி தெரு, ஏழுமலை தெரு, பாளையம் பிள்ளை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தி.நகர் பகுதிக்குட்பட்ட ராமசாமி தெரு, உஸ்மான் சாலை, தண்டபாணி தெரு, பிஞ்சாலா சுப்பிரமணி தெருவிலும், பெரம்பூர் பெரியார் நகர் பகுதிக்குட்பட்ட பெரியார் நகர், ஜி.கே.எம் காலனி, எஸ்.ஆர்.பி காலனி, அகரம், வெற்றி நகர், ஜவஹர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் அளிக்கப்படும்.