ராணிப்பேட்டை. ஜூன் 22- உயர்மின் கோபுரம் அமைக்கம் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கக் கோரி உயர்மின் கோபு ரங்களுக் கெதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் புகளூர் முதல் வேலூர் மாவட்டம் திருவலம் வரை உள்ள 400 கே.வி. திட்டம், அரியலூர் மாவட்டத்திலிருந்து திரு வலம் வழியாக செல்லும் 765 கே.வி. திட்டம் விவசாய விளை நிலங்களில் பவர்கிரிட் நிறு வனத்தால் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்தாக, சென்னையிலிருந்து சோளிங்கர் வழியாக திருவலம் வரைக்கும் புதிதாக மின் பாதை அமைக்கும் திட்டமும் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலும் விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க முன்வந்தபோது கடுமை யாக ஆட்சேபித்தும், சாலை யோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இத் திட்டத்தை அமல்படுத்த மாவட்ட ஆட்சியரின் முன் நுழைவு அனுமதி பெறவேண்டும். விளை நிலம், நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு முழுமையாக வழங்கிய பின்னரே உயர்மின் கோபுரத்தை பவர் கிரிட் நிறுவனம் அமைக்க வேண்டும். ஆனாலும், சட்டத்திற்குட்பட்ட எந்த விதிமுறைகளையும் பவர் கிரிட் நிறுவனமும், வருவாய்த்துறையும் கடைபிடிக்கவில்லை. நிலத்திற்கான வழிக்காட்டி மதிப்பீட்டை குறைத்து இழப்பீடு வழங்க முன்வந்தபோது நிராகரித்தனர்.
அப்போது காவல்துறையின் துணையோடு பலவந்தமாக விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரத்தை அமைத்தனர். ஆனாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முன்வரவில்லை. இந்த நிலையில், எரிவாயு குழாய்,பெட்ரோலியம் பைப்லைன் அமைக்க நிலத்தை கைப்பற்றிய போது 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை 54/2020 இல் பத்து மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட் டதை போல், உயர்மின் கோபுர திட்டத்தால் நிலத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு 2013 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி சந்தை மதிப்பீட்டை கணக்கில் கொண்டு கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கெதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் புதனன்று (ஜூன்22) கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நாமக்கல் பி.பெருமாள் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி நிறைவு செய்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என்.காசி நாதன், விவசாயிகள் சங்க வேலூர் மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பி.ரகுபதி, டி.சந்திரன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். பிறகு, ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் வழங்கியது போன்ற அதிகபட்ச இழப்பீட்டுக்கு இணையாக வழங்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.