districts

img

விழுப்புரத்தில் வறுமையால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

விழுப்புரம், ஜன. 24- விழுப்புரத்தில் கொ ரோனாவால் வருமானமின்றி குடும்ப வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் திங்களன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பிரகாஷ் (37). இவர் ஷேர் ஆட்டோ ஒட்டி வந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா காலகட்டத்தில் போதிய வருமானம் இன்றி, குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பிரகாசுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன் ராஜா, பிரவின் ராஜா என்ற மகன்களும் உள்ளனர்.