districts

img

பொங்கல் தொகுப்புடன் பானை சேர்த்து வழங்க மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

விழுப்புரம், ஜன. 1- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் நலி வடைந்து வரும் இத்தொழிலை காப்பாற்ற இதனை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்ந்து வழங்க அரசு முன்வர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை யும் ஒன்றாகும். இதையொட்டி புதுப்  பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதற்காக விழுப்புரம் அருகே சாலை அகரம், ராகவன்பேட்டை, அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, விக்கிர வாண்டி,பனபாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயார் செய்யப்படும் மண் பானைகள் விழுப்புரம் மாவட்டம் மட்டு மின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளி மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பருவ மழையை கருத்தில் கொண்டு சற்று முன்னதாகவே மண் பானைகள் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மண்பானை தயாரிப்பு பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது. சிறிய அளவிலான பானை கள் முதல் பெரிய பானைகள் வரை தயாரிக்கப்படுகின்றன. தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகைதான் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் தற்போது மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு மக்களிடம் குறைந்து வரு கிறது. இதனால் இந்த தொழில் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. எனவே நலிவடைந்து வரும் இந்த தொழிலை மேம்படுத்தும் வகையிலும், தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து மண் பானையையும் வழங்க வேண்டும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.