சிதம்பரம், டிச.16- சிதம்பரம் நகரத்திற்குஉட்பட்ட பகுதியில் நீர் வழி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடு களுக்கு மாற்று இடம் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் நகரில் தில்லை யம்மன் கோயில் தெரு, தில்லை யம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, அண்ணா தெரு, அம்பேத்கார் நகர், பாலமான் பகுதி, நேரு நகர், ஈ.பி இறக்கம், கோவிந்தசாமி தெரு, குமரன் தெரு, மந்தகரை பகுதி, ஓமக்குளம், வாகிசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியி ருந்த மக்களின் குடிசை வீடுகள், மாடி வீடுகள் நீர் வழி ஆக்கிரமிப்பு என்ற பெய ரில் அதிமுக ஆட்சியின் போது இடிக்கப்பட்டது. பின்னர் அடுத்துவந்த ஆட்சியாளர்கள் மிச்சசொச்சமிருந்த வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர். இந்தபகுதியில் குடியிருந்த பெரும்பான்மையான மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள். இதில் பல குடும்பங்கள் சொந்தவீடு இல்லாமல் வாடகை வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலை யில் வாடகை கொடுத்து குடி யிருக்க முடியாத சிலர் பாலமான் வாய்க்கால் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் உடமைகளை திறந்தவெளியில் வைத்து உணவு சமைத்து உண்கின்றனர். மழை காலங்களில் பாது காப்பான இடமில்லாமல் குழந்தை களுடன் அங்குமிங்கும் அல்லாடு வது பார்ப்போர் இதயத்தை கணக்கச்செய்கிறது. இதில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களின் இறந்து விட்டால் அவர்களின் சடலத்தை குடி யிருக்கும் வீடுகளில் இறுதி அஞ்சலிக்கு வைக்க முடிய வில்லை. ஏற்கெனவே அவர்கள் குடியிருந்த பாலமான் வாய்க்கால் அருகே சடலத்தை வைத்து இறுதி அஞ்சலி நிகழ்வை நடத்தி பின்னர் சுடுகாடு எடுத்துச் செல்கின்றனர். இதே போல் 7 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் அவ்வப்போது அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து வைத்து அனுப்பி விடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை கேட்டு கடந்த ஆகஸ்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் போராட்டத்தை சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தியது. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது 3 மாத அவகாசம் கொடுங்கள் இடத்தை தேர்வு செய்து வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வீடுகளை இழந்தவர்கள் புகார் தெரி வித்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் கூறுகையில், வீடு இழந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா கொடுத்தால் தமிழக வீட்டு வசதி வாரிய நிர்வாகம் அவர்க ளுக்கு வீடு கட்டி கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதி காரிகள் மக்களுக்கு உதவிகள் செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். இதற்கு சரியான நடவடிக்கை இல்லை. எனவே எந்த சமா தானத்திற்கும் இடமில்லாமல் வீடு களைஇழந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து வீட்டு மனை பட்டா கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.