பொன்னேரி, மார்ச் 65 உக்ரைனில் இருந்து பொன்னேரி திரும்பிய மருத்துவ மாணவி படிப்பை தமிழகத்தில் தொடர அனுமதிக்குமா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பொன்னேரியை அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த ஜெகன்-நாகஜோதியின் மகளான ரித்திகா, உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரை னில் போர் நடக்கும் நிலையில், மாணவி ரித்திகா சனிக்கிழமை (மார்ச் 5) பொன்னேரி திரும்பினார். இவரை சென்னை விமான நிலை யத்தில் அவரது பெற்றோர் வரவேற்றனர். மேலும் வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணவி ரித்திகா உக்ரைனில் தனக்கு நடந்த போர் பாதிப்புகளை தெரி வித்தார். அவர் கூறியதாவது:- மேற்கு உக்ரைன் பகுதியில் போர் குறித்து செய்தி வெளியானபோது தான் தனக்கு தெரியும். சாப்பாடு, குடிநீருக்கு கூட கஷ்டப் பட்டோம். கார்கிவ் பகுதியில் குண்டு வெடித்த நிலையில், கடைகள் மூடப்பட்டது. அப்போது உணவு கிடைக்காமல் அவதிப் பட்டோம். 2 நாட்களுக்கு தேவையான உணவு எடுத்து வைத்து கொண்டோம். 2 நாட்கள் வெளியில் செல்ல முடியாமல் பதுங்கி இருந்தோம். ருமேனியாவில் 3 நாட்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் இந்திய விமா னம் மூலம் வந்தோம். என்னை போல இன்னும் கஷ்டப்படும் மாணவர்களை அரசு மீட்க வேண்டும். எனது தங்கை கார்கிவ் பகுதியில் உள்ளார். இரண்டொரு நாட்களில் அவரும் தாயகம் திரும்புவார். உக்ரைனில் தற்போதுள்ள சூழலில் படிப்பை தொடருவது கஷ்டம். எனவே, தமிழக அரசு இங்கேயே படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும். தம்மை பத்திரமாக ஊருக்கு அழைத்து வந்த தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.