திருவள்ளூர், பிப் 16- மின் வாரியத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பொன்னேரி கோட்ட மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொன் னேரி கோட்ட 18ஆவது மாநாடு திங்களன்று (பிப் 14) கவரைப்பேட்டையில் நடை பெற்றது. இதில் கோட்ட தலைவர் எல்.கோபிநாதன் தலைமை தாங்கினார். வடக்கு கோட்ட இணைச் செயலாளர் வி.உமாநந்தன் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.துணை நிர்வாகி இ.முத்து வரவேற்றார்.அஞ்சலி தீர்மானத்தை பி.ஜோதிபாசு வாசித்தார்.கோட்ட செயலாளர் எம். ஜெயக்குமார் வேலை அறிக்கையை முன்மொழிந் தார்.மாநில செயலாளர் எம்.தயாளன் நிறைய உரை யாற்றினார். கோட்ட துணை நிர்வாகிகள் கதிரேசன், மதனகோபால், சத்திய மூர்த்தி, சாலட் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சிவக்கு மார் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் பொன்னேரி கோட்டத் தலைவராக இ.முத்து, கோட்டச் செயலாளராக எம்.ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் சென்னை வடக்கு-1 திட்டத்தில் உள்ள களப் பணியாளர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும், மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின் தடை ஏற்ப டும் மையங்களில் உள்ள வாகனங்கள் 24 மணிநேர மும் இயங்கும் படி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.