கடலூர் மாவட்டத்தில் உள்ள 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வியாழனன்று (ஜன.9) கடலூர் பீச் ரோட்டில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் துவக்கிவைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.