சென்னை, டிச.21- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. மிக்ஜம் புயலால் சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், சுமார் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருநெல் வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் அதி கனமழை யால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தென் மாவட்டங்க ளில் மழையால் பாதிப்புகள் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரண தொகைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு களை சந்தித்துள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வரு கிறது. ரொக்கத் தொகையை ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்பு களை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்று ள்ளார். அவர் சென்னை திரும்பிய தும் ஓரிரு நாட்களில் முதலமைச்சரு டன் ஆலோசிக்கப்பட்டு அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தலைமை செயலக வட்டார தகவல் கள் தெரிவிக்கின்றன.