திருநின்றவூர்,ஜன.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் (தமுஎகச) மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து திருநின்றவூரில் சனிக் கிழமையன்று (ஜன18), புத்தகங்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தின. எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாள ருமான கமலாலயன் புத்தக உலகிற்குள் ஒரு பயணம் என்ற பொருளில், வாசித்தலின் அவ சியம் குறித்து பல்வேறு நூல்களையும் அறி ஞர்களையும் மேற்கோள் காட்டி பேசினார். ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போது தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் தனிப்பட்ட இருவருக்கு இடையேயான கடித ங்களாக இல்லாமல் பிற்காலத்தில் எவ்வாறு வரலாற்றுப் பதிவுகளாக மதிக்கப்பட்டன என்பதில் தொடங்கி கல்வியியல் அறிஞர் பாலோ பிரெய்ரீ, பிருந்தா காரத், பரிணா மன் கவிதை வரை அவர் நிகழ்த்திய உரை, மனித குல வரலாறு போன்றவற்றை அவர் நினைவுகூர்ந்தார். புத்தகங்களை வாசிப்பது என்பது வெறும் தகவல் சேகரிப்பு மட்டும் அல்ல, வாசிப்ப வரைப் பண்படுத்துவது, அவர் மூலமாக மற்ற வர்களுக்கும் அடுத்த தலைமுறை மனி தர்களுக்கும் வரலாற்றையும் நீண்ட கால சமூக அறிவையும் அனுபவங்களையும் கடத்திப் பாதுகாப்பது என்ற சமூக செயல் பாடு ஆகும் என்று குறிப்பிட்டார். அறிவுத் தேடலின், அறிவு சேகரத்தின் அடுத்த கட்ட மான நூலகங்களின் வரலாற்றை அரிஸ்டாட் டில், பிளாட்டோ, சீசரோ தொடங்கி கி.மு ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிறுவப் பட்ட நாலந்தா பல்கலைக்கழக நூலகம், ஐந்தாம் நூற்றாண்டில் சமண சமயத் துறவி கள் சேகரித்து வைத்து இருந்த நூல்கள், மொகலாய மன்னர்களான பாபர், அக்பர் உள்ளிட்ட பலரது நூலகங்கள், ராஜஸ்தான் மன்னர்கள், ஆந்திர மாநிலம் குண்டூரில் இரண்டாம் நூற்றாண்டில் நாகார்ச்சுனன் என்ற அரசன் உருவாக்கிய ஐந்து மாடிகள் கொண்ட நூலகம், பரோடா, தஞ்சை, புதுக்கோட்டை மன்னர்கள் ஊடாக ராகுல சாங்கிருத்தியாயன் போன்ற அறிஞர்கள் பராமரித்து வைத்து இருந்த தனிப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள், நூலகங்கள் என மிகப்பல வரலாற்றுப் பதிவுகளை அவர் விரித்தது வாசிப்பின் அவசியத்தை மேலும் வலியுறுத்துவதாக இருந்தது. வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவொளி இயக்கம் என்று பரவலாக அறி யப்பட்ட வயது வந்தோர் எழுத்தறிவு இயக் கத்தின் மாவட்டப் பொறுப்பாளர், மாநிலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப் புகளை இருபது வருடங்களுக்குப் மேலாகத் தான் வகித்து இயங்கிய நாட்களில், தனி ப்பட்ட முறையில் வாசிப்பின் அவசியத்தைத் தான் உணர்ந்து, அதை சமூகச் செயல்பாட் டுக்கு பயன்படுத்திக் கொண்ட அனுபவங் களையும், பள்ளிகளை எட்டிப்பார்க்கவும் வாய்ப்பில்லாத சமூகத்தின் அடித்தட்டு உழைப்பாளி மக்களின் எழுத்தறிவு மேம்பட இந்த இயக்கங்களுடன் இணைந்த தனது அனுபவம் எவ்வாறு உதவி செய்தது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். விழாவில் மு. இக்பால் அகமது எழுதிய மக்களிசை மேதை எம். பி.சீனிவாசன் அறி முகம் செய்யப்பட்டது. திருநின்றவூர் அரசு நூலகத்தின் பொறுப்பாளர் இர.சுரேஷ்பாபு, எழுத்தாளர் கலைச்செல்வன், ஓவியர் மாரி ஆனந்த், மாவட்டச் செயலாளர் கி. பாரி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ரா. உத்தண்ட ராமன், கு. கன்னியப்பன், மோசஸ் பிரபு, தேவி மதிவாணன், நா. ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி யில் தாங்கள் வாசித்த நூல்கள் பற்றி சசி கலா, மதனாஶ்ரீ, ஐயப்பன் ஆகியோர் பேசி னார்கள்.