districts

img

ரமணா மறுவாழ்வு இல்லத்தில் பொங்கல் விழா

திருவண்ணாமலை, ஜன. 15- திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் ரமணா மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்கள். குணமடைந்ததும் அவர்களது உறவினர்களிடம் சேர்த்து விடுகின்றனர். இங்கு பெண்களுக்கு சுமைதாங்கி என்ற பெயரில் தனியாக மனநலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைந்துள்ள கோலமிட்டு பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். மேலும் விழாவை முன்னிட்டு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆண்கள், பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில் ரமணா மறுவாழ்வு மைய நிர்வாகிகள், யோகா பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.