பொங்கல் தினத்தையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை நகரம் முழுவதும் சமத்துவப் பொங்கல் வைத்தனர். பல்வேறு இடங்களில் கோலப் போட்டிகள் நடத்தி, அழகிய கோலங்கள் தெரிவு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி சென்னை நகரம் முழுவதும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பரிசுகளை வழங்கினர்.