districts

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

திருவண்ணாமலை, ஏப். 5- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர்,  செங்கம், ஆரணி, வந்தவாசி, கீழ்பென்னாத் தூர், செய்யாறு ஆகிய 8 சட்டமன்றத் தொகுதி களில் மொத்தம் 2 ஆயிரத்து 885 வாக்குச் சாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து  77 ஆயிரத்து 440 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில்  10 லட்சத்து 17 ஆயிரத்து 322  பேர் ஆண்வாக்காளர்கள், 10 லட்சத்து 60 ஆயிரத்து 26 பேர் பெண்வாக்காளர்கள் வாக்க ளிக்கின்றனர். தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்கா ளர்களுக்கும் பூத் சிலிப் வீடு வீடாக சென்று  வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள  அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் 1400  போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள்  240 பேர் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்  சாவடிகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்க ளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணி வாக்குச்சாவடி அலுவலர்க ளாக 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்ட  பயிற்சி வகுப்பு நடந்த மையங்களில் வாக்குச்  சாவடி அலுவலர்களுக்கு பணி நியமன  ஆணை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்க ளுக்கான வரிசையில் தனி மனித இடை வெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணி தல், கிருமி நாசினியால் கைகளை சுத்தம்  செய்தல், கையுறை அணிதல், காய்ச்சல்  பரிசோதனை போன்ற தடுப்பு நடவடிக்கை களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;