districts

சாலைவிபத்தில் காவலர் பலி

திருவள்ளுர்,ஜூன் 5-

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் காவலர் கமலதாசன் (44). ஞாயிறன்று சாலைவிபத்தில் பலியானார்.

    சென்னை அடையாறில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்த இவர்  ஞாயிறன்று மாலை பொன்னேரியில் இருந்து காட்டாவூர்  பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  கூடுவாஞ்சேரி சாலை அருகில் நிலைதடுமாறிய அவர் சாலை யின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து பலியானார்.