சென்னை, ஜன.8- செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு (வயது 30). இவர் டீ குடிக்க வந்தபோது அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாக னத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது யாரும் எதிர்பாராத வகையில் நாட்டு வெடிகுண் டை வீசி கத்தியால் சரமாரி யாக வெட்டியது. உருத்தெரி யாமல் தலையை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை கூறுகிறது. செங்கல்பட்டு மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ் (22). காய்கறி கடைக்காரர். இவரது வீடு செங்கல்பட்டு நகர் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மகேஷ் தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கும்பல் வீட்டுக்குள் புகுந்து மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள் தொடர் பான குற்றவாளிகளைப் பிடிக்க செங்கல்பட்டு நகர் காவல்துறையினர் நட வடிக்கை எடுத்தனர்.
அவர்களது விசாரணையில் செங்கல்பட்டு சுண்ணாம்புக் கார தெருவை சேர்ந்த ரவுடி களான மொய்தீன் (25), தினேஷ் (24), மாதவன் (22) ஆகியோர் இந்த கொலை யில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலி வனம் பகுதியில் பதுங்கி யிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்படி அங்கு சென்ற காவல் துறையினர் மொய்தீன், தினேஷ், மாதவன், ஜெர்சிகா ஆகியோரை கைது செய்து அழைத்து வந்தனர். செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருங்குன்பள்ளி அருகே வந்தபோது காவல் துறை வாகனத்தில் இருந்த மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் காவல்துறை யினரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றன ராம். இதனால் அதிர்ச்சி யடைந்த காவல்துறை ஆய்வாளர் பாதுகாப்புக்கு வைத்திருந்த கைத்துப்பாக்கி யால் ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க சுட்டாராம்.
இதில் எதிர்பாராதவிதமாக மொய்தீன், தினேஷ் ஆகியோ ரின் தலை மற்றும் மார்பு பகுதி யில் குண்டுகள் பாய்ந்தன. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த னர். காவல்துறையினர் தற்கா ப்புக்காக சுட்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். கொலை க்கான காரணங்கள் என்ன என்பது விசாரணையில் தெரியவரும் என்கின்றனர் காவல் அதிகாரிகள். இந்த நிகழ்வுகளை யடுத்து, காவல்நிலையங் கள் நீதிமன்றங்களாகவும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகளாகவும் மாறமுடி யாது என ஓய்வு பெற்ற நீதி பதி கே.சந்துரு தெளிவு படுத்தியுள்ளார் இந்த கொலை நட வடிக்கை கவலையை ஏற்படுத் துகிறது. என்கவுண்ட்டர்கள் ஒரு நபரின் சட்டபூர்வ விசாரணைக்கான உரிமை யைப் பறிக்கிறது. காவல் துறை சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
காவல் நிலையங்கள் நீதிமன்றங் களாகவும், அதிகாரிகள் நீதி பதிகளாகவும் மாற முடியாது என்றார் கே.சந்துரு. குற்றவாளிகளை கட்டுப் படுத்துவதற்கு (வீழ்த்து வதற்கு) அரசு கூடுதல் அர சியலமைப்பு வழிகளைக் கையாளும் முறைஉருவாகி யுள்ளது. இந்த நடவடி க்கை காவல்துறையால் அங்கீகரிக்கப்படுகிறது. பொதுமக்களாலும் வர வேற்கப்படுகிறது. ஆனால், இது ஒரு தவறான நட வடிக்கை என்றார். 2015- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறி அப்பாவித் தமிழர்கள் 22 பேரை ஆந்திர காவல்துறை யினர் சுட்டுக் கொன்றனர். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு காவல்துறை அதிகாரி கூட இதுவரை கைதுசெய்யப்பட வில்லை. அதே நேரத்தில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கைது செய்யப் பட்டது, அவர் காவல்துறை யால் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு,
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை யையும் நினைவு கூர்ந்தார். மக்கள் கண்காணிப் பகத்தின் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் கூறுகை யில், “என்கவுண்ட்டர்களில் உயிரிழப்பவர்கள் குற்ற வாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், ஒருவரின் உயிரைப் பறிக்கும் உரிமை காவல்துறைக்கு இல்லை. என்கவுண்ட்டர்கள் சந்தேக நபர்களின் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையைப் பயன்படுத்து வதைத்” தடுக்கிறது. என்கிறார்.