சிபிஎம் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தேர்தல் அலுவலர் தலையிட கோரிக்கை
திருவள்ளூர், ஏப் 10- திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் மெய்யூர் மற்றும் பேரத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் தெரு முனை கூட்டம் ஒலிப்பெருக்கி வைத்து நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர் அனுமதி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் சார்பில் கும்மிடிப் பூண்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மெய்யூரில் ஏப் 5 அன்றும், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரத்தூரில் ஏப்.8 அன்றும் பிரச்சார கூட்டங்கள் ஒலிப்பெருக்கி வைத்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முறைப்படி இணையதள வழி யாக விண்ணப்பிக்கப்பட்டது. இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரியபாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மெய்யூர், வெங்கல் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பேரத்தூர் ஆகிய இரண்டு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட இடங்களில் பிரச்சாரக் கூட்டம் ஒலிப்பெருக்கி வைத்து நடத்த உதவி தேர்தல் அலு வலர்கள் அனுமதி மறுத்துள்ளனர். திருவள்ளூர் மக்களவைத் தொகுதி முழுவதும் பல கிராமங்களில் தெருமுனை கூட்டம் ஒலிப்பெருக்கியுடன் அனுமதி பெற்று கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரது எல்லையில் மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலையிட்டு பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஒலிபெருக்கி வைத்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என எஸ்.கோபால் அந்த மனுவில் வலி யுறுத்தியுள்ளார்.
மோடிக்கு எதிரான சரியான கண்டன அறிக்கை திருக்குறள்! கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேச்சு
மதுரை, ஏப்.10- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்ற எழுத்தாளர், படைப்பாளிகளின் கூடுகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: கடந்த 10 வருடங்களில் மக்களுக்காக என்ன செய்தோம் என்று சொல்லிக் கொள்ள பாஜக வினரிடம் ஒன்றுமே இல்லை. அதனால் ராமர் கோவிலுக்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றனர். மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல் லாம் திருக்குறளைப் பற்றி பேசுகிறார். திருக்குறளில் 25 அதிகாரங்கள் அரசியலைப் பேசுகின்றன. அறம் பிறழாமல் ஆட்சி செய்வதைப் பற்றி வள்ளுவரைப் போல, வேறு யாரும் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் மோடிக்கு எதிரான சரியான கண்டன அறிக்கை திருக்குறள்தான். மிகவும் கொடூரமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் ஆர்எஸ்எஸ், பாஜக அட்டூழியம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. எல்லா இடங்களிலும் நச்சு விதைகளை அது விதைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சமூகத்தில் ஒரு படைப்பாளன் சும்மா இருக்க முடியுமா? எங்களைப் போல கட்சி சார்ந்தவர்களும், அமைப்பு களைச் சார்ந்தவர்கள் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதைப் பற்றி யெல்லாம் சில எழுத்தாளர்கள் பேச மறுக்கின்றனர். எழுத மறுக்கின்றனர். பொதுவானவர்கள் என்ற பிம்பத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தயவு செய்து பேசுங்கள். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் பேசுவதற்கான கடைசி வாய்ப்பும் பறிக்கப்பட்டு விடும். ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வேட்பாளராக சு.வெங்கடேசன் மதுரை மண்ணில் நிற்கிறார். அவரை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
தேனி உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர்
தேனி, ஏப்.10- தேனி உழவர் சந்தையில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு ஆத ரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தேனியில் நடை பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, காலை 8 மணிக்கு தேனி விளையாட்டுத் திடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து ரையாடி, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்ட றிந்தார். பின்னர், உழவர் சந்தைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோ ருடன் கலந்துரை யாடினார். முதலமைச்சர் நிலை யிலிருந்தாலும், மிகவும் எளிமையான முறையில் பொதுமக்களை நேரில் வந்து சந்தித்ததை எண்ணி மகிழ்ந்தனர். அங்கு பெற்றோர்களுடன் காய்கறி வாங்கிட வருகைதந்த சிறுவர், சிறு மியர்களிடம் படிப்பு குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர், குழந்தைகள், முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதிமுக மீது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கு
மதுரை, ஏப்.10 - தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்வதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில், “அதிமுக ஒரு விளம்பரத்தை வெளி யிட்டு பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். இதுகுறித்த உண்மையை சட்டமன்றத்திலேயே கூறியிருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில்தான் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தனர் என்றார்.