கிருஷ்ணகிரி, நவ.9 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக எல்லையை ஒட்டி மலையில் உள்ளது அஞ்செட்டி. வட்டத் தலைநகராக இருந்தாலும் மிகவும் பின்தங்கிய பகுதி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இது வரைக்கும் அடிப்படை வசதி கள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை. அஞ்செட்டி ஊராட்சி சித்தாண்ட புரம் கிராமத்தில் பழனி அம்மா வுக்கும் அங்குள்ள ஜெயராமன் என்ற கஞ்சனுக்கும் நிலப் பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் முன்னி லையில் அளவீடு செய்து சரி பிரச்சனை முடிவுக்கு கொண்டு வந்தனர். பழனியம்மாள் தனக்கு சொந்த மான நிலத்தில் அமைத்திருந்த சூரிய மின்வேலியை கஞ்சான் சேதப்படுத்தியுள்ளார். காஞ்சனா தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த செம்மரச் செடிகளை பிடுங்கி எறிந்து விட்டு பழனியம்மாள் மீது பழி போட்டுள்ளார். இதை கேட்ட பழனியம்மாளை கடுமையாக தாக்கியதுடன் ஆபாச வார்த்தைகளால் கீழ்த்தரமாகவும் திட்டியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பழனியம்மாள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்யாமல் அஞ்செட்டி காவல் உதவி ஆய்வாளர் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தேவராஜன், பழனியம்மாவுடன் காவல் நிலையத்திற்கு சென்றார். மேலும், காவல் துறை மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த னர். அதன்பிறகு, கஞ்சான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வட்டச் செய லாளர் தேவராஜன் மீது எதிர் தரப்பினர் கொடுத்த பொய் புகாரின் பேரில் தேவராஜ் மற்றும் மாதம்மா ஆகியோர் மீது அஞ்செட்டி காவல் உதவி ஆய்வாளர் என்றே வழக்குப் பதிவு செய்துள்ளார். அஞ்செட்டி காவல் ஆய்வாளரின் அராஜகத்தை கண்டித்தும்,பொய் வழக்கை உடனடியாக திரும்பப் வலியுறுத்தியும் பழனியம்மாவை தாக்கிய கஞ்சான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு,மாவட்ட செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் உரை யாற்றினர். செயற்குழு உறுப்பி னர் இருதயராஜ்,வட்டச் ஒன்றிய செயலாளர்கள் தளி வெங்க டேஷ்,சூளகிரி முனியப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.