சென்னை, ஜூலை 3- மெரினாவில் கடலில் மூழ்கி சனிக்கிழமையன்று ஒரே நாளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கி பலியாகினர். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்களான அஸ்ரப், டேனியல் இருவரும் நெச்சிக்குப்பம் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த னர். அப்போது இருவரும் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்து அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் குதித்து 2 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் டேனியலை மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மாணவர் அஸ்ரப் கடலில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 2 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடல் கரை ஒதுங்கியது. முன்னதாக காலையில் கல்லூரி மாணவரான சூரியன் ஜெயின் கடலில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் பேர் மெரினாவுக்கு வந்து கடலில் குளிப்பது அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.