கிருஷ்ணகிரி,செப்.7- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 மையங்களில் மறியல் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் வெங்க டேஷ், ராஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரியில் வட்டச் செயலாளர் ராஜா, பர்கூர் சீனிவாசன் ஆகியோர் தலை மையில் நடைபெற்ற மறியல் போராட்டத் தில் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் கலந்து கொண்டார். ஓசூர் மாநகர செயலாளர் சி.பி.ஜெய ராமன் ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் மறியல் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி பங்கேற்றார். சூளகிரியில் வட்டச் செயலாளர் முனியப்பா, அஞ்செட்டியில் வட்டச் செயாளர் தேவராஜ், பேச்சம்பள்ளியில் வட்டச் செயலாளர் சாமு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பெரிய சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரையில் வட்டச் செயலாளர் மகாலிங்கம் சிங்காரப்பேட்டையில் பகுதிச் செயலாளர் சபாபதி ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் கலந்து கொண்டார்.