விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப்.7அன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தை நடத்துகிறது. இதனையொட்டி வெள்ளியன்று (செப்.2) எழும்பூர் பகுதி, கே.பி.பார்க்கில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி பிரச்சாரத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.