districts

புழுதிவாக்கம் பகுதியில் பெட்ரோலிய தகன மேடை

ஆலந்தூர், ஜூன் 2-

     புழுதிவாக்கத்தில் ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்ட திரவ பெட்ரோலிய தகன எரிமேடை விரைவில் திறக்கப்பட உள்ளது.

     பெருங்குடி மண்டலம், 186ஆவது வார்டுக்குட்பட்ட புழுதிவாக்கம் மயானபூமி உள்ள இடத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய தகனமேடை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து மயான பூமி மூடப்பட்டது.

   இந்நிலையில், இறுதி கட்டப் பணிகளை மண்டல உதவி ஆணையர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் பார்வையிட்டனர். ஜூன் 4ஆம் தேதி இந்த திரவ பெட்ரோலிய தகன எரிமேடை அமைச்சர்கள் முன்னிலையில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.