districts

img

காட்டு நாயக்கன் மக்களுக்கு சாதிசான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு

திருத்தணி,அக்.10-   காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  திருத்தணி கோட்டம் பள்ளிப்பட்டு பொதட்டூர் பேட்டை நொச்சிலி  கணகம் மாசத்திரம் திருவாலங்காடு  ஆகிய கிராமங்களில் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் பூர்வீக மாக வசித்து வருகிறார்கள் அவர்களின் குழந்தைகளுடன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா. சரவணன் காட்டு நாயக்கன் சங்க மாநில செயலாளர் ஐய்யனார் மலைசங்க மாநிலக் குழு உறுப்பினர் பழனி மற்றும் திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி ஆகியோர் தலைமையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து காட்டு நாயக்கன் பழங்குடி மக்களின் வாரிசுகளுக்கு சாதி சான்றி தழ் வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர் உடனடியாக விசாரணை செய்து உரிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதியளித் தார். அப்போது 50க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் உடனி ருந்தனர்.