தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியத்திற்கு இணையாக அறநிலையத்துறை கோவில் பணியாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் கருணை கொடை வழங்க கோரி துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் பொதுச்செயலாளர் அ.முத்துசாமி மனு அளித்தார். உடன் சென்னை கோட்ட கவுரவ தலைவர் ஜி.வேலாயுதம், தலைவர் எஸ்.தனசேகர், பொருளாளர் தே.குகன் உள்ளிட்டோர் இருந்தனர்.