ராணிப்பேட்டை, டிச.18- ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு ஊராட்சிக்கு உட்பட்டது கன்னிகா புரம் கிராமம். இங்கு சர்வே எண். 148 இல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த இம்மக்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு பட்டா வழங்குமாறு வலி யுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி தலை மையில் திங்களன்று (டிச. 18) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிளைச்செயலாளர் எம்.ரமேஷ், தலைவர் எம்.தனபால் அப்போது உடனி ருந்தனர்.