வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவது எதிர்த்து செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.சரவணன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்றனர். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செயலாளர் அ.லட்சுமணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மின்வாரிய அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நகர செயலாளர் எஸ். ராஜா தலைமையில் மின்வாரிய கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், ஜெயசித்ரா, நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்