districts

img

பட்டா கேட்டு விவசாயிகள் மனு

கிருஷ்ணகிரி,ஏப்.22- ஊத்தங்கரை மாரம்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட மாரம்பட்டி, நாப்பிராம் பட்ட, மாரன்கொட்டாய், வசந்தபுரம்  கிராமங்களில் குடியிருக்க வீடு இல்லாமல் 100 க்கும் மேற்பட்ட  தலித், அருந்த தியர்,முஸ்லிம் சிறுபான்மை குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரு கின்றனர்.  அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் இட நெருக்கடிக்குள் வசித்து வரும் இவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும் இதுவரை பட்டா கிடைக்க வில்லை. இந்நிலையில் சனிக்கிழமை யன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஊத்தங்கரை வட்ட செயலாளர் அண்ணா மலை தலைமையில்  தலித் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு துணை வட்டாட்சியா் ஜெயபாலிடம் கோரிக்கை மனு அளித்தனர்.               மனுக்களைப் பெற்ற துணை வட்டாட்சியா் ஜெயபால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.