கிருஷ்ணகிரி, டிச.18- மாவட்டம் முழுவதும் மிகக்குறைந்த தொகுப்பு ஊதியத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்ககோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு,கழிவறை கட்டுவதற்கு மக்களை ஊக்குவித்து விழிப்புணர்வு வழங்குதல்,பள்ளி,அங்கன்வாடி மையங்களில் கழிவறை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் வாக்காளர்கள் கணக்கெடுப்பு என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். சுகாதார ஊக்குநர்களுக்கு அரசு அறிவித்துள்ள உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் , பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டது.